பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடலுக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கிட்டத்தட்ட 300 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில், ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களும் உள்ளனர்.
உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்களும் அது தொடர்பான விடைகளும் பல்கலைக்கழகப் போதனாசிரியர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் மாணவர்களால் வழங்கப்பட்ட பல விடைத்தாள்கள் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமர்ப்பித்த விடைகள் மற்றும் உரிய வினாத்தாள்களுக்கு மாணவர்கள் சமர்ப்பித்த விடைத்தாள்கள் பகுப்பாய்வு செய்யப்படும் என பரீட்சை திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது
அதன்பின், அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, தேர்வெழுதிய மாணவர்களுக்கு அநீதி இழைக்காத வகையில் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை தயாரிக்கப்படும். அந்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு வருமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாரத்தில் பல சுற்றுக்களாக குறித்த கலந்துரையாடல்களை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam