மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி
மின்சாரம் மற்றும் எரிபொருள் (Electricity and fuel) விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (19.04.2024) முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து சேவைகள்
இதன்படி மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (Saman Ekanayake) இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |