தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்தார்.
புதிய வர்த்தமானி அறிவித்தல்
அதன் பிரகாரம் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350ரூபா என்ற வகையில் நாளாந்தம் 1700 ரூபா சம்பளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை தொழில் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு சட்ட ரீதியாக சவால் விடுக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan