ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் காசா குழந்தைகள் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் தாக்குதலில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா.வின் நிவாரண குழுக்கள் சார்பில் உணவுகள் வழங்கப்படினும் அது காஸா மக்களுக்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டபட்டுள்ளது.
மேலும், வடக்கு காஸாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள் உணவை வாங்குவதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |