கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தில் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு - அங்கஜன் (Video)
கிளிநொச்சி கௌதாரிமுனை காற்றாலை தொடர்பான கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி-கௌதாரிமுனை காற்றாலை திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று(13.06.2023) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்,அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த விசேட கூட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு அனுமதி
மேலும் தெரிவிக்கையில்,“கௌதாரிமுனை காற்றாலை அமைப்பதன் மூலம் மக்களுக்கு முழுமையான நன்மைகள் கிடைக்க வேண்டும்.
அதற்கமைய முதலீட்டாளர்களுடன் நிபந்தனைகளை உள்ளடக்கிய உடன்படிக்கைகள் முன்வைக்கப்படாமல் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அனுமதி வழங்குவது சரியாகாது.
மாறாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அனுமதி வழங்கினால் அது அவரது தன்னிச்சையான முடிவாக மட்டுமே அமையும்.இது கூட்டத்தின் முடிவாகாது.” என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்,சுமந்திரன், அங்கஜன் ஆகியோர் உட்பட துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச்செயலக பதவி நிலை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
