புத்தளம் நகரிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது
புத்தளம் மேஹர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக சமையலடுப்பு வெடித்துள்ளது.
எனினும் சம்பவம் காரணமாக எவருக்கும் காயமேற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
புத்தளம் நகரில் இதுவே முதலாவது வெடிப்புச் சம்பவமென பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம்
பொலிஸார் தெரிவித்துள்ளார்.