மட்டக்களப்பிலும் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு (VIDEO)
மட்டக்களப்பு - திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
தேனிர் வைப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் எரிவாயு அடுப்பினை செயல்படுத்தியதன் பின்னர் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிறதியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கும் சுவிஸ் கிராம
கிராம சேவகர் அலுவலர்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 9 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam