அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் எரிவாயு வெடிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரதான சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு ரைஸ் குக்கரில் ஒரு பகுதி வெடித்து தீப்பிடித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று மதியம் நடைபெற்றுள்ளது. இந்த எரிவாயு ரைஸ் குக்கருக்கு மூன்று எரிவாயு கொள்கலன்களில் இருந்து எரிவாயு விநியோகிக்கப்படுவதுடன் ஒரு தடைவையில் 25 கிலோ கிராம் அரிசியை சமைக்க முடியும் என கூறப்படுகிறது.
இன்று மதியம் பாரிய சத்ததுடன் ஔவனுக்கு எரிவாயுவை செல்லும் பகுதி மற்றும் எரிவாயு வெளியேறும் அடத்தில் தீப்பிடித்துள்ளது.
இதனையடுத்து ஊழியர்கள் எரிவாயு விநியோகத்தை துண்டித்துள்ளனர்.
இதனால்,மிகப் பெரிய ஆபத்து நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எரிவாயு ஔவன் தீப்பிடித்தமை சம்பந்தமாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
