காலி மைதானத்தை சுற்றி எரிவாயு சிலிண்டர்கள்: அதிசயமாய் பார்த்த கிரிக்கெட் அணியினர்
காலி கிரிக்கெட் மைதானத்தை சுற்றி எரிவாயு சிலிண்டர்கள் அடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு பெற்று கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்து நின்றுள்ளனர்.
காலி மைதானத்தை சுற்றிலும் எரிவாயு சிலிண்டர்கள் அடுக்கப்பட்டுள்ளதனை கிரிக்கெட் வீரர்கள் ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினருக்கு இது வித்தியாசமான அனுபவமாக அமைந்துள்ளது.
முதல் போட்டி
எதிர்வரும் 29ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது.
இந்த போட்டிக்கான பயிற்சிகளில் அவுஸ்திரேலிய அணியினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் பெற காத்திருந்த வாகனங்கள் மீது மோதிய பேருந்து: ஐந்து பேர் வைத்தியசாலையில் (Photos) |