எரிவாயு கொள்கலன் வெடிப்புகள் சாதாரணமானவை : பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை (Video)
நாட்டில் தற்போது நடந்து வரும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு நிலைமை குறித்து பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை எனவும் இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அச்சப்பட வேண்டியதில்லை. முன்னரும் இப்படியான வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. எதிர்காலத்தில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கும்.
ஆங்காங்கே இந்த சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு வருடத்தில் கணக்கிட்டு பாருங்கள் எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும் என்று?. இது எரிவாயுவை பயன்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றம் குறைந்த நிலைமை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 12 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan