கனடாவில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவுநாளில் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி
தமிழின அழிப்பு நினைவு நாள் நேற்று(18) கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, கார்ல்ரன் தொகுதியின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புரூஸ் பான்ஜோய், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் வாழும் சாட்சியங்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உட்பட 300இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு இந்த நாளை நினைவுகூர்ந்துள்ளனர்.
தமிழ் இனப்படுகொலைகளின் பொறுப்புக்கூறலுக்கு
தமிழினப்படுகொலை நினைவு நாளாக மே 18 கனேடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு மூன்றாவது வருடமாகவும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16 வருட வலிமிகுந்த நினைவுநாளை ஒட்டி ஒட்டாவாவின் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து வழமைபோல இவ்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளக் குறியீடாக சிறிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி காட்சிப்படுத்தப்பட்டு பெருந்திரளானோர் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்தியிருந்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் உரையில் தமிழ் இனப்படுகொலைகளின் பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமான பயணத்தில் தனதும் கனேடிய அரசினதும் பற்றுறுதியை மீள உறுதிப்படுத்தியிருந்தார்.
தமிழின அழிப்பின் சாட்சியங்கள்
தொடர்ந்து தமிழின அழிப்பு செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கூறலில் கனேடிய அரசின் உறுதிப்பாட்டை பிரதமரின் செய்தி உறுதிப்படுத்தியிருந்தது.
மேலும், கனேடிய எதிர்க்கட்சியும் இன அழிப்பு விடயத்தில் தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் தான் உறுதியாக இருப்பதை மீள வலியுறுத்தியிருந்தது.
தமிழின அழிப்பின் சாட்சியங்களாக ஆவணங்களாக அண்மைக்காலத்தில் வெளியாகிய மூன்று நூல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிநாட்களின் நினைவலைகள் மீட்டப்பட்டன.

வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
