இலங்கை தனது கடந்த காலத்தை சமாளிக்க இன்னும் போராடி வருவது துயரமானது.. உலக தமிழர் பேரவை

Sri Lankan Tamils Sri Lankan Peoples World
By Amal May 18, 2025 09:45 PM GMT
Report

போர் முடிந்த பிறகும் இலங்கை தனது கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் போராடி வருவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த 16ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் தாம் இணைந்து கொள்வதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

போரின் இறுதிக் கட்டம், வரலாற்றில் மிகவும் கொடூரமான ஒன்றாகும், இறுதி மாதங்களில் மட்டும் 40,000இற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சமூகம் 

இது இலங்கையில் சமத்துவம் மற்றும் நீதிக்கான 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் தமிழ் சமூகம் எதிர்கொண்ட மொத்த இறப்புக்கள், அழிவு மற்றும் இடம்பெயர்வுகளில் ஒரு பகுதி மட்டுமே என்று பேரவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தனது கடந்த காலத்தை சமாளிக்க இன்னும் போராடி வருவது துயரமானது.. உலக தமிழர் பேரவை | Genocide Remembrance Day 2025 World Tamil Forum

இலங்கை அரசால் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர். இலங்கையில் மரணம் மற்றும் அழிவு தமிழ் சமூகத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை உலக தமிழர் பேரவை உணர்ந்துள்ளது, எனவே வன்முறை இன மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாம் அஞ்சலி செலுத்துவதாக பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், போர் முடிந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதிலும், ஆயுத மோதலுக்கு வழிவகுத்த மூல காரணங்களை நிவர்த்தி செய்வதிலும், இலங்கை தனது கடந்த காலத்தை சமாளிக்க இன்னும் போராடி வருவது துயரமானது என்று பேரவை தெரிவித்துள்ளது.

போருக்குப் பின்னர் முதல் ஐந்து ஆண்டுகளாக, வெற்றி பெற்ற அரசாங்கம் அதிகாரத்தை சர்வாதிகாரமாக ஒருங்கிணைப்பதை நாடியது. இது, தமிழ் சமூகத்தை மேலும் பலவீனப்படுத்தியது, தமிழர்களின் அதிர்ச்சி அல்லது மனித உரிமைகளை பொருட்படுத்தவில்லை.

அத்துடன், தமிழ் சமூகத்தின் அடிப்படை குறைகளையும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் நிவர்த்தி செய்வதில் அந்த அரசாங்கம் தோல்வியடைந்தது. இலங்கை இப்போது ஒரு புதிய அரசியல் கட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பொருளாதார - அரசியல் நெருக்கடியின் போது முற்போக்கான அரகலய ( காலிமுகத்திடல் போராட்டம்) இயக்கத்தின் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்டது.

பேரினவாத பெரும்பான்மை சக்திகள்

இது, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு அளித்தது. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த நம்பிக்கை குறைந்து வருகிறது, மேலும் ஏமாற்ற உணர்வு ஏற்பட்டு வருகிறது.

இலங்கை தனது கடந்த காலத்தை சமாளிக்க இன்னும் போராடி வருவது துயரமானது.. உலக தமிழர் பேரவை | Genocide Remembrance Day 2025 World Tamil Forum

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதா அல்லது தனியார் நிலங்களை விடுவிப்பதா, அல்லது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதா, அல்லது சிறுபான்மை சமூகங்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்களை பேரினவாத பெரும்பான்மை சக்திகள் சட்டவிரோதமாக அபகரிக்கும் போது தலையிடுவதா? போன்ற விடயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.

நிலைமாறுகால நீதியைப் பொறுத்தவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கட்டாயமாக காணாமல் போனதால் பாதிக்கப்பட்ட எந்த குடும்பமும் நீதியைப் பெறவில்லை குற்றவியல் குற்றத்தை வலியுறுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது இன்னும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை.

என்றாலும், புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் போது, அது, அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்களில் தமிழ் மக்களின் ஒப்புதலைப் பெறுமா என்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான சந்தேகங்கள் உள்ளன. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதும், தற்போதுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவதும் கூட - இந்த கட்டத்தில் தமிழ் மக்களின் முதன்மை எதிர்பார்ப்பு - பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

தசாப்த காலப் போராட்டம் 

எனவே, அநுரகுமாரவின் இந்த அரசாங்கமும், தங்கள் பிரச்சினைகளில், முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கப் போவதில்லை என்ற கருத்து தமிழ் மற்றும் சிறுபான்மை சமூகங்களிடையே உருவாகி வருகிறது. இந்தச் சூழலில், பல தசாப்த காலப் போராட்டத்தின் போது தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் தியாகங்கள் குறித்து தமிழ் சமூகம் விழிப்புணர்வையும் உணர்திறனையும் கொண்டிருப்பது முக்கியம்.

இலங்கை தனது கடந்த காலத்தை சமாளிக்க இன்னும் போராடி வருவது துயரமானது.. உலக தமிழர் பேரவை | Genocide Remembrance Day 2025 World Tamil Forum

தமிழ் மக்களும் அவர்களின் தலைவர்களும் தற்போதைய அரசியல் சூழலில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மதிப்பாய்வு செய்து, இலங்கையிலும் சர்வதேச சமூகத்திலும் உள்ள அனைத்து சமூகங்களிலும் உள்ள பங்குதாரர்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் ஒற்றுமையாகவும் மூலோபாய ரீதியாகவும் செயல்படுவது முக்கியமானது.

இந்தநிலையில், உலக தமிழர் பேரவை மற்றும் பௌத்த மகா சங்கம் என்பவற்றின் கூட்டு இமயமலைப் பிரகடனம், ஒரு முக்கியமான படியாகும், இது, இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சிறந்த விளைவுகளை அடைய சிவில் சமூகத்தை தயார்படுத்த உதவும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த பிரகடனத்தின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்துவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை நீதியை அடையாமல், பிராந்தியங்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு அல்லது பொருளாதார மேம்பாட்டை அடையாமல் போகலாம் என்று உலக தமிழர் பேரவை கவலை கொண்டுள்ளது.

எனவே, குறித்த சவால்களை மனதில் கொண்டு, தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்யும் மற்றும் இலங்கையை பிராந்தியத்தில் ஒரு சமரசம் நிறைந்த, அமைதியான மற்றும் வளமான நாடாக மாற்றுவதற்காக, சர்வதேச சமூகத்துடனும் இலங்கையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும், தமது அமைப்பு தொடர்ந்தும் செயற்படும் என்று உலக தமிழர் பேரவை உறுதியளித்துள்ளது. 

மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US