நானு ஓயாவில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானுஓயா டெஸ்போட் கீழ் பிரிவில் ஆறு மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 120 குடும்பங்களுக்கு மேலாக வசிக்கும் இப்பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீதியில் கொட்டப்பட்டு மலைப்போல் தேங்கி உள்ளது.
இதற்கு காரணம் முறையான பொது குப்பை குழிகள் இல்லாமல் உள்ளதால் பொது மக்கள் வீதியில் குப்பைகளை கொட்டுக்கின்றனர்.
தொற்று நோய் பரவும் அபாயம்
இவ்வாறு நடந்து செல்லும் வீதியை ஆக்கிரமித்துள்ள குப்பைகளால் தினமும் பாடசாலை மாணவர்கள் , தொழிலாளர் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, நானுஓயா டெஸ்போட் பகுதியில் தினசரி வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் தூய்மைப்பணியாளர்களால் சரிவர வாங்கப்படாததால் பல பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் வீட்டில் தேங்கும் குப்பைகளை வீதியோரம், தெருக்கள் ஓரமாகவும் வீசி செல்லும் நிலை உள்ளது.
மனிதன் பயன்படுத்திய கழிவுகளான குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகைப்படும்.
பிரச்சினை
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய தோட்டத்தில் இரண்டு பிரதான குப்பை குழிகள் இருந்தன. அதில் வீட்டு குப்பைகளை கொட்டி தோட்ட நிர்வாகம் மூலமாக மக்கச் செய்வார்கள்.மக்கிய குப்பைகள் உரமாக பயன்படுத்தினர்.

இன்றைக்கு அந்த குப்பை குழிகள் அந்த இடங்களில் மனித பாவனையால் இல்லாமல் உள்ளது அது போலவே வீடுகளிலும் இல்லை இதனால் குப்பைகள் இன்றைக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது.
பொதுமக்கள் மூக்கை மூடியவாறு நடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri