கொழும்பில் 16 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது
கொழும்பு புறநகர் பகுதியான மட்டக்குளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தை பகுதியில் கடந்த 24.08.2023 அன்று இரவு இடம்பெற்ற தாக்குதலில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணைக்கு அமைய இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று (26.08.2023) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 16 வயது சிறுவன் உட்பட, 22, 27, 34 மற்றும் 38 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்பு குழாய், பைண்டிங் கட்டர் மற்றும் பொக்ஸ் பார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (27.08.2023) புதுக்கடை 06ஆம் இலக்கம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
