இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் படுகாயம்
நீர்கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகொட பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 31 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் 29 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடும் மோதல்
அவர்கள் இருவரும் கந்தானை, நாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரும் காயமடைந்தவரும் இரு தரப்பினரையும் சேர்ந்தவர்கள் எனவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் இடையே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan