எரிபொருளுக்கான வரி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அளுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு லீற்றர் டீசலின் விலையை 300 ரூபாவிற்கும் குறைந்த தொகையில் விற்பனை செய்யக் கூடிய நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்
எனினும், எல்லா மாதங்களிலும் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீசலுக்கு பாரியளவு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அகற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ள கடனை அறவீடு செய்யும் நோக்கில் திறைசேரியினால் இந்த வரியை அறவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 900 பில்லியன் ரூபா கடன் செலுத்தப்பட்டதன் பின்னரே இந்த வரியை நீக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam