பொலிஸாரின் தொடர் எச்சரிக்கைக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் இந்த சந்திப்பில் ஆர்ப்பாட்டங்களின் முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

பொலிஸாரின் தொடர் எச்சரிக்கை
இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்கள பகுதிக்கு நேற்றைய தினமும் சென்றிருந்த பொலிஸார் குறித்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.
இதேவேளை மீண்டும் இன்றைய தினமும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| காலிமுகத்திடல் பகுதிக்கு வந்து மீண்டும் விசேட அறிவிப்பை வழங்கிய பொலிஸார் |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan