பிள்ளைகளை பெற்றோர் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்களா..! ஆரம்பிக்கப்பட்டது விசாரணை
கொழும்பு - காலிமுகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பிள்ளைகளை பெற்றோர் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணை ஆரம்பம்
பொலிஸார், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனரா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெற்றோர், வேண்டுமென்றே பிள்ளைகளை ஆபத்தில் ஆழ்த்தினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை
சிலர் சிறுவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளதாக தென்படுகின்றது எனவும், இது சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலானது எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 9ம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்பட்டமை குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.



ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
