அம்பியூலன்ஸ் வண்டிக்கு இடம் கொடாத பொலிஸார்! ஆத்திரமடைந்த பொது மக்கள் (Video)
கொழும்பு - லோட்டஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக அப்பகுதியில் வந்த அம்பியூலன்ஸ் வண்டிக்கு பொலிஸார் இடம்கொடுக்கவில்லை என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் ஆத்திரமடைந்ததை அடுத்து அம்பியூலன்ஸ் வண்டி திரும்பிச் சென்றுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிளை ஆர்ப்பாட்டப் பேரணிகள் காலி முகத்திடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இதனைத் தடுக்கும் முகமாக காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் வீதித் தடைகள் போட்டு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கும் செல்வதற்கு இடம் கொடாததால் அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் சற்று முன்னர் முரண்பாடான நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
