காலிமுகத்திடல் தாக்குதல்! பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்!
காலிமுகத்திடல் போராட்டக் களம் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்தார்கள் என்று குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிசாந்த மற்றும் மிலான் ஜெயதிலக்க ஆகியோரையே விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தவிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்தும் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இன்றும் சம்பவம் தொடர்பில் மொரட்டுவ மாநகர முதல்வர் சமன் லால் பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டார்.