முன்னணி மீது தொடரும் கைதுகள்! கஜேந்திரகுமாரை அழைத்த பொலிஸார்
தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் கட்டுக்கடங்காத வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்திரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து நாங்கள் மீள்வதற்கு முன்னர் இன்று காலை எமது கட்சியினுடைய வடமராட்சி மகளிர் அணித் தலைவி அருள்மதி கைது செய்யப்பட்டுள்ளார். எந்த காரணமும் இன்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் அச்சுறுத்தும் பொழுது அதனை வீடியோ எடுத்ததுதான் அவர் செய்த வேலை. மேலும், அன்று பொலிஸார் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுட முயலும் பொழுது அதனைக் கண்டு எச்சரிக்க முயன்ற உதயசிவமும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
