நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைவாக, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
பரீட்சை ஆரம்பம்
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 32 பரீட்சை மையங்களில் 3224 பரீட்சாத்திகள் க.பொ.த சாதாரண பரீட்சை இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ஆஷிக்
மட்டக்களப்பு மாவட்டம்
பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது.
2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சைகள் ஆரம்பமானது.

கடும் மழைக்கு நடுவில் பரீட்சாத்திகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்து வரும் வேளையிலும், மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர், பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,பட்டிருப்பு வலயம்,மட்டக்களப்பு மேற்கு வலயம்,கல்குடாவ லயம், மட்டக்களப்பு மத்திய வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - குமார்
மலையக பாடசாலைகள்
2025ஆம் ஆண்டிற்கான 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் பாதுகாப்பு
இந்த முறை 2025 (2026) சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமானதுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளித்துள்ளனர்.
மேலும், பரீட்சை நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகள், புளுடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலையகப்பகுதியில் மாணவர்கள் இன்று பரீட்சை எழுதுவதற்காக நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்ததுடன் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தன.
மேலதிக தகவல் - மலைவாஞ்சன்
கிளிநொச்சி
கல்வி பொது சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம் கிளிநொச்சி 2026 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சைக்கு 3728 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 17.02.2024 இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 ஆண்டு 31 பரீட்சை நிலையங்கள் 3728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும், பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களுக்கு சென்றுள்ளனர்.

மேலதிக தகவல்- தேவந்தன்
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri