சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2023ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பமாகியிருந்தன.
இந்தநிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |