உயர்தரப் தரப் பரீட்சையின் போது கடமையாற்றவுள்ள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டபத்திற்குள் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாளை மறுதினம் பரீட்சை
நாளை மறுதினம் (25ஆம் திகதி) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்தநிலையில், உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே, பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உதவி அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கையடக்க தொலைபேசிகளை பரீட்சை மண்டபத்திற்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam