உயர்தரப் தரப் பரீட்சையின் போது கடமையாற்றவுள்ள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டபத்திற்குள் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாளை மறுதினம் பரீட்சை
நாளை மறுதினம் (25ஆம் திகதி) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்தநிலையில், உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே, பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உதவி அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கையடக்க தொலைபேசிகளை பரீட்சை மண்டபத்திற்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri