மின்சார சபைக்கு இனி எரிபொருள் வழங்க முடியாது! - உதய கம்மன்பில
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் தேவையான டீசலை வழங்குவதற்கு டொலர்கள் மட்டுமே தேவை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் லொக்குகேவிடம் பேசுவதற்கு எமக்கு எதுவும் இல்லை, மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைச்சருடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை ரூபாய் பரிவர்த்தனை மூலம் வழங்கி வருவதாக நாங்கள் குறிப்பிட்டோம்.
ஆனால் எரிபொருளை இறக்குமதி செய்ய டொலர்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இதுவரை 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், எனவே நாளை வரை எவ்விதமான மின்வெட்டுமின்றி மின்சார விநியோகம் இடம்பெறும் என்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 13 மணி நேரம் முன்

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri
