எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை
கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இன்று (12) முதல் நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு எரிபொருள் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் பிரதேச கமநல உத்தியோகத்தரின் அனுமதி வழங்கப்பட்டால் அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வேறு தேவைகளுக்காக பீப்பாய்களில் எரிபொருள் தேவைப்படுமாயின் பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.
ஆனால், மண்ணெண்ணெய் கேன்களில் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான தேவையான எரிபொருள் இருப்புக்கள் பெறப்பட்டுள்ளன எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri