எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை
கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இன்று (12) முதல் நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு எரிபொருள் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் பிரதேச கமநல உத்தியோகத்தரின் அனுமதி வழங்கப்பட்டால் அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வேறு தேவைகளுக்காக பீப்பாய்களில் எரிபொருள் தேவைப்படுமாயின் பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.
ஆனால், மண்ணெண்ணெய் கேன்களில் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான தேவையான எரிபொருள் இருப்புக்கள் பெறப்பட்டுள்ளன எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
