எரிபொருள் தட்டுப்பாடு: பாதையை மூடி எதிர்ப்புக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதிகள்
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாதையொன்றை மூடி முச்சக்கரவண்டி சாரதிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
வீதியை மறித்து போராட்டம்
இந்நிலையில் கொழும்பு, நாரஹேன்பிட்ட பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளில் ஒன்றிணைந்து இன்று காலை தொடக்கம் நாவல-நாரஹேன்பிட்ட பிரதான வீதியை மறித்து முச்சக்கர வண்டிகளை நிறுத்தி பாதையை மறித்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் காரணமாகக் குறித்த பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்ந்தும் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
