வெளிநாட்டு நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட சதியே எரிபொருள் தட்டுப்பாடு! சங்கத்தின் தலைவர் பகிரங்கம்..
இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை ஐம்பது சதவீதம் குறைத்ததாலேயே எரிபொருளுக்கான வரிசை மற்றும் பிரச்சினை உருவானதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
வெளிநாட்டு நிறுவனங்களின் சதி
வெளிநாட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இதை வேண்டுமென செய்தாகவே தோன்றுகிறது. இவர்கள் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட எரிபொருள் வரிசையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய கிழக்கு போர் ஆரம்பித்த நாள் முதல் இவர்கள் திடீரென விநியோகத்தை குறைத்த பின்னர் சிபெட்கோ நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்த மக்களால் பாரிய வரிசைகள் உருவாக்கப்பட்டன.
இந்த நிறுவனங்கள் 2023 ஆம்ஆண்டு எமது நாட்டில் வர்த்தகத்தை ஆரம்பித்த போது அரசாங்கத்திற்கு டொலர் பிரச்சினை ஏற்பட்டாலும் தாங்கள் எரிபொருளை விநியோகிப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் எரிபொருளை மட்டுப்படுத்தி மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். இது திட்டமிடப்பட்டு செய்த செயற்பாடகவே தோன்றுகிறது.

குறித்த நிறுவனங்கள் அவர்களிடமிருக்கும் எரிபொருளை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.அவ்வாறு குறிப்பிட்டே எங்களிடம் இருந்த நிரப்பு நிலையங்களை கைப்பற்றிக் கொண்டனர்.
இலங்கையில் 1300 நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.அதில் ஐஓசிக்கு 270-சீனோபெக் 150-ஆர்.எம்.பார்க் செல்150 என்ற வகையிலும் 800 சிபெட்கோவுக்கு சொந்தமானதாகும்.
2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்கள் எங்களிடம் நிரப்பு நிலையங்களை வாங்கி பாரிய புனரமைப்பு வேலைகள் ஒன்றும் செய்யவில்லை.
சில நிறுவனங்கள் சீபெட்கோவின் களஞ்சிய நிலையங்களிலேயே தங்களின் எரிபொருளை சேமித்து வைத்துள்ளனர்.அதிலும் அவர்கள் பாரிய இலாபத்தையே சம்பாந்திக்கின்றனர்.
இவர்களின் இந்த நடவடிக்கையால் எங்களிடம் இருந்த எரிபொருளும் தீர்ந்து விட்டன.இது வெளிநாடுகளின் சதித்திட்டமோ என்று கூட தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri