எரிபொருள் விலையேற்றம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவே! சஜித்
எரிபொருள் விலையேற்றம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் எரிபொருள்துறை அமைச்சரால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என அரசாங்க கட்சியான பிரதமர் தலைமையிலான பொதுஜன முன்னணியின் செயலாளர் கோரியுள்ளமை தொடர்பிலேயே சஜித் பிரேமதாச தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை,பொது மக்கள் அசௌகரியத்துக்கு முகம்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.