சடுதியாக அதிகரித்த எரிபொருளின் விலை! அநுர அரசாங்கம் மீது அதிருப்தி காட்ட ஆரம்பிக்கும் மக்கள்
நாட்டில் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அதிலும் மலையக பெருந்தோட்ட பகுதியில் வாழுகின்ற மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொருட்களின் விலைமட்டுமே அதிகரிக்கப்படுகின்றது, சம்பளம் அதே நிலையில் தான் உள்ளது.
எந்தபொருட்களுக்கும் விலை அதிகரிக்க மாட்டோம் என்று கூறிய நிலையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் முதற்கொண்டு எரிபொருள் வரை விலையை அதிகரித்துள்ளார்கள் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள மக்கள் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காண்க....