எரிபொருள் விலையில் திடீர் மாற்றம் : நள்ளிரவு முதல் நடைமுறை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலையில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தம்
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 456 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 363 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
