எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம்: அமைச்சர் விளக்கம்
எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தாம் குற்றம் சுமத்தவில்லை என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் எரிபொருளில் 162 ரூபா தரகுப் பணம் முன்னாள் அமைச்சருக்கு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ அல்லது தமது கட்சியின் உறுப்பினர்கள் எவரோ குற்றம் சுமத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு லீற்றர் எரிபொருளில் 102 ரூபா வரி அறவீடு செய்யப்படுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.
விலைச் சூத்திரம்
மேலும் இந்த வரியில் 50 ரூபா திறைசேரியினால் கடனுக்காக அறவீடு செய்யப்படுகின்றது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார் என வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளுக்கான விலை இந்த கடனையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப்படுகின்றது என அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலை நிர்ணயமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது எனவும், இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலை நிர்ணயமும் அவ்வாறே மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri