எரிபொருள் விலையேற்றம்: இடை நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் (Photos)
கிளிநொச்சி- முட்கொம்பன் கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகள் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்கள், மாணவர்கள் எனப்பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் விசனம்
கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன், செக்காலை மற்றும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கண்ணகை புரம் ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் கடந்த காலங்களில் இல்லாத நிலையில் மக்களின் தொடர் கோரிக்கை காரணமாக குறிப்பிட்ட இரு பேருந்து சேவைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறித்த போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதனால் தாங்கள் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
போதிய அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் தேவைகளை நாடி வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையிலும் இவ்வாறு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமையால் குறித்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| மண்ணெண்ணெய் இன்மையால் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை (Photos) |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
