எரிபொருள் விநியோகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
தற்போதுள்ள இருப்புக்களின் விநியோகம் தொடரும் அதேவேளையில், புதிய கொள்வனவு கட்டளைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டண சூத்திரம்
விநியோகஸ்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3வீத தள்ளுபடியை இரத்து செய்து, நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டண சூத்திரத்தை செயல்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மார்ச் 2022இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையுடன் ஒத்துப்போகிறது, இந்த மாற்றம் மார்ச் 2022இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையுடன் ஒத்துப்போகிறது, இது தற்போதைய கட்டண முறையை சட்டவிரோதமாக்குகிறது என்று, பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று பிற்பகல் ஒரு ஊடக சந்திப்பில் தங்கள் பெட்ரோலிய கொள்வனவு கட்டளைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |