மலையகத்தில் அனுமதிச்சீட்டு முறைமையில் எரிபொருள் விநியோகம் (Photos)
நாட்டில் அனுமதிச்சீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல்
எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் அனுமதிச்சீட்டு முறையில் எரிபொருள் விநியோகம் நடைபெறவுள்ளது.
இராணுவ படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு தழுவிய இன்று (27) காலை முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.

ஹட்டனில் வழங்கி வைப்பு
ஹட்டன் நகரிலுள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களுக்கு எரிபொருளை பெற்றுகொள்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஹட்டன் பொலிஸாரால் குறிப்பு புத்தகமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பன அதன்மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு வாகனம் ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை பெறுவதை தடுத்தல், வரிசைகளை குறைத்தல் உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

May you like this video
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam