எரிபொருள் வரிசைகளை குறைக்க திட்டம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் 03 நாட்களில் அனைத்து வகையான எரிபொருட்களின் மேலதிக கையிருப்புகளையும் விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
Reviewed fuel distribution & Instructed to distribute additional stocks of all products islandwide in the next 3 days. Lapses in distribution, delays in unloading & delays in payments for orders by Fuel stations has created long lines. Plan to reduce the lines in the next 2 days.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 27, 2022
எரிபொருள் வரிசைகளை முற்றாக குறைக்க திட்டம்
இதற்கமைய, எரிபொருள் விநியோகத்தை மீளாய்வு செய்ததன் பின்னர் நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரையிறங்குவதில் ஏற்பட்ட தாமதம், விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பணம் செலுத்துவதில் தாமதம் போன்ற காரணங்களால் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசைகளை முற்றாக குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




