பொதுமக்களை அச்சுறுத்தும் பொலிஸார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
எரிபொருள் நிலையங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பொலிஸார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பித்துள்ளார்.
நியாயத்துக்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முஜீபுர் ரஹ்மான், நியாயத்துக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி அடக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் வரிசைகளில் அவ்வாறு நடந்து கொள்ளும் பொலிஸார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.