புத்தாண்டு காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் அறிமுகமாகும் புதிய திட்டம்!
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இந்த புதிய திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
புதிய திட்டம்
ஆரம்பகட்டமாக இந்த திட்டமானது, தெரிவு செய்யப்பட்ட 21 சதொச விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் உறைந்த மீன் (Frozen Fish) பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே.மார்க் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri
