வடமராட்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த செல்வோருக்கும் இலவச போக்குவரத்து
யாழ்.வடமராட்சி கிழக்கிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்வோருக்கும் இலவச போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கிலிருந்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் செல்லவிருக்கும் உறவுகள் இலவச போக்குவரத்து சேவையினூடாக செல்ல முடியும்.
அவ்வாறு செல்லவுள்ளோர் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது இலவச போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும் என்பதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்புகளுக்கு ‐ 0766721782, 0774767757