இலங்கையர்களுக்கு இலவச அரிசி: அரசாங்கம் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை 2 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்காக 40,000 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெட்ரிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,