சுவிட்சர்லாந்தை தொடர்ந்து ஜேர்மனி வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் நேற்று முதல் இலவசமாக கோவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜேர்மனியும் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜேர்மனியிலும் இனி இலவச கோவிட் பரிசோதனை அனைவருக்கும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வாழ்வோர் இனி கோவிட் தொடர்பான அன்டிஜன் பரிசோதனையை செய்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற போதும் 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள், மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 12 முதல் 17 வயதுள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இலவச கோவிட் பரிசோதனை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையால் பிசிஆர் பரிசோதனை பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் இலவச பரிசோதனை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி...
சுவிட்சர்லாந்தில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam
