கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்மாணத்திற்கான இடப்பற்றாக்குறை குறித்து ஆராய்வு
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்மாணத்திற்கான இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பாக மட்டக்களப்பு மண்றேசா பகுதிக்கு விஜயம் செய்து பல்கலைக்கழக வளாகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆராய்ந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு நேற்று(02) விஜயம் செய்திருந்த நிலையில் அங்கு எழுந்துள்ள இடப்பற்றாக்குறை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.
இதுவரை காலமும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கற்கை நெறிக்காக உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை எதிர்வரும் ஆண்டு முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான புதிய விடுதி வசதிகள், ஒன்றுகூடல் மண்டபம், விரிவுரை மண்டபம் போன்றவற்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மண்றேசா பகுதியில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் குறித்த பகுதியில் இடப்பற்றாக்குறையினை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலையும் மருத்துவ பீட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
குறித்த களவிஜயம் மற்றும் கலந்துரையாடலின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி குழந்தை நல வைத்திய நிபுணர் அஞ்சலா அருட்பிரகாசம், சிரேஷ்ட விரிவுரையாளர்களான வைத்தியர் அருளானந்தம் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் மார்க்கண்டு திருக்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
