வட மாகாணத்தில் நடந்த மோசடி: ஆளுநரின் நடவடிக்கை(Photo)
வடமாகாண உள்ளக பிரதம கணக்காளராக கடமையாற்றி சுரேஜினியை வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு இடமாற்றுமாறு வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
மோசடி
வடக்கு மாகாணத்தில் நிதி நிர்வாக மோசடிகள், மந்திகை ஆதார வைத்தியசாலைகளில் இடம்பெற்ற நிதி முறைகேடு மற்றும் யாழ் மாநகர சபை உத்தியோதரால் மேற்கொள்ளப்பட்ட பல லட்சம் ரூபாய் மோசடி என்பன இடம்பெற்றுள்ளது.
ஆளுநரின் நடவடிக்கை
இந்த மோசடிகள் தொடர்பில் ஆளுநருக்கு
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையடுத்தே குறித்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.