ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது
ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவரை கந்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறி்த்த கைது நடவடிக்கை கந்தர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும்சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
