இலங்கையின் பிரபல உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி: முகம் சுழிக்க வைக்கும் காணொளி (Video)
உலகின் பிரபல உணவு விற்பனை நிறுவனத்தின் இலங்கைக் கிளையொன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபர் ஒருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார்.
அவர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளான அந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி இறைச்சித் துண்டுகளோடு குறித்த உணவகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதன்போது, கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல் இருப்பதுடன், அதில் இரத்தம் உள்ளதையும் உணவகத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் காண்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த இறைச்சித் துண்டுகள் தனது பிள்ளைகளுக்காக வாங்கிச் சென்றது என்றும் அவர்கள் இதனை உண்டு நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
