இலங்கை தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கையிலுள்ள முன்பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு யுனிசெப் ஊடாக நேரடி பங்களிப்பை வழங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் மற்றும் பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு யுனிசெப் நிறுவனத்தால் முன்பள்ளிக் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு நேரடிப் பங்களிப்பை வழங்க பிரான்ஸ் தூதுவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், பிரான்ஸ் தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மொனராகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணி நிறைவு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைப் புகாரளிக்க தொலைபேசி எண்களுடன் கூடிய ஸ்டிக்கர் அச்சிடுதல், தோட்டங்களில் பணிபுரியும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் சம்பளம் குறைவு, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் தேசிய கொள்கை குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அமைச்சர் தெளிவுபடுத்தினர்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேராவும் கலந்துகொண்டார்.
May you like this Video
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan