புத்தளத்தில் தீக்கிரையாக்கப்பட்ட நான்கு சொகுசு பேருந்துகள்
புத்தளம்(Puttalam), வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தரித்துநின்ற நான்கு சொகுசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (20.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு சொகுசு பேருந்துகளில் ஒன்று முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்த சிசி ரீவி கெமராவை சோதனையிட்டு பார்த்த போது, அடையாளம் தெரியாத நபரொருவரால் இந்த நான்கு சொகுசு பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக , சுமார் 3 கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 12 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan