புத்தளத்தில் தீக்கிரையாக்கப்பட்ட நான்கு சொகுசு பேருந்துகள்
புத்தளம்(Puttalam), வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தரித்துநின்ற நான்கு சொகுசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (20.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு சொகுசு பேருந்துகளில் ஒன்று முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்த சிசி ரீவி கெமராவை சோதனையிட்டு பார்த்த போது, அடையாளம் தெரியாத நபரொருவரால் இந்த நான்கு சொகுசு பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக , சுமார் 3 கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam