அதிகாரிகளின் அசமந்தம்: நான்கு நாட்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்கள்
வவுனியா - மாகாறம்பைக் குளம், காத்தார்சின்னக் குளம், சிறிராமபுரம் வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களில் ஒரு பகுதியை சேர்ந்த மக்களுக்கு நான்கு நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மின்சார தடங்கல் காரணமாக பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், மின்சாரத்தை மூலதனமாக கொண்டு தொழில் புரியும் பலரும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மின்சார தடங்கல்
அத்துடன் மின்சார தடங்கல் தொடர்பாக வவுனியா மின்சார சபை மற்றும் வடக்கு மாகாண மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு முறைப்பாடு மேற்கொண்டும் தங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் அதிகாரிகள் அசமந்தபோக்குடன் செயற்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
