புதிய மின்சார சட்ட வரைவு பணிகள் இறுதி கட்டத்தில்! கஞ்சன விஜேசேகர
இலங்கை மின்சார சபையின் புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
New Electricity Act that will unbundle CEB & begin the reforms is at the final stage of drafting. The amended draft copy will be shared with stakeholders, development agencies & reforms experts to get their observations & recommendations for the final draft. Once received from… pic.twitter.com/ui6ODFU7V8
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 12, 2023
திருத்தப்பட்ட வரைவின் நகல் தொடர்புடைய பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர் மற்றும் சீர்திருத்த நிபுணர்களுடன் இறுதி வரைவுக்கான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறப் பகிரப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை அனுமதி
பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்டதும் இறுதி வரைவு சட்ட வரைவாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சான்றிதழுக்காக மாத இறுதிக்குள் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளது.
மேலும், புதிய மின்சாரச் சட்டத்தின் இறுதி வரைபு சான்றிதழின் பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
