யாழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்று(10.06.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நேற்று முன்தினம்(09) நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 37 நிமிடங்கள் முன்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
